தேவேந்திர குல வேளாளர் மக்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05 மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ் மண்ணுக்கும், மக்களுக்குமாகத் தன்னலமற்று ஒரு தூய அரசியலை முன்னெடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி எனும் ஒரு மாபெரும் அரசியல் படையைக் கட்டி எழுப்பி வருகிறோம்.
இப்பெரும்போரில் அறப்போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியை ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைக்கப் பாடுபட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக் கடமையாகிறது. அதனை நிறைவேற்றும் பொருட்டு, கருத்தியல் பரப்புரையும், களப்பணியும், மக்கள் நலப் பணிகளும் செய்து ஈடேற்றப் பொருளாதாரத் தன்னிறைவு மிக அத்தியாவசியக் காரணியாகிறது.
‘விடுதலை என்பது தேசியக்கடமை! இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது துரோகமாகும்.
அந்நெருக்கடியினை முழுத் தேசிய இனமே பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற நம் தமிழ்த்தேசியத்தலைவரின் கூற்றுக்கிணங்க, நம் கட்சி எதிர்கொண்டிருக்கும் இப்பொருளாதார நெருக்கடியினையும், நிதிச்சுமையையும் பகிர்ந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு இனமானத்தமிழரின் தலையாயக் கடமையாகும். மாதந்தோறும் தங்கள் வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை இனமானம் காக்க வழங்குவது, நாம் தமிழர் கட்சியின் பெரும் வளர்ச்சிக்கு ஆதாரமாய் விளங்கும். இதனை உணர்ந்து, நமது கட்சியை வளர்த்து வார்த்தெடுக்க நிதியுதவி அளித்திடக் கோருகிறோம்.
எல்லாச் செலவினங்களையும் நம்மால் சமாளித்து, கட்சிப்பணிகளை இன்னும் வீரியமாகத் துரிதப்படுத்த முடியும். இதனையுணர்ந்து இன விடுதலைக்களத்தில் அயராது நிற்கும் நாம் தமிழர் கட்சியை அரசியல் பேராற்றலாக மாற்ற தங்களால் இயன்ற நிதியை வழங்குங்கள்.
உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இதுகுறித்துப் பேசுங்கள். இதற்கான இன்றியமையாத் தேவையை உணரச் செய்து, கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்க செய்யுங்கள் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சி வாழ்த்துகளுடன்,