எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! வருகிற சூலை 10ஆம் தேதி மதுரையில் விராதனூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
ஆடு-மாடுகளின் மாநாடு!
'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்!
ஆடும் மாடும் நம் செல்வங்கள்!
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று நமது வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய மறைமொழியில்,
கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் மாடும் நம் செல்வங்கள் என்பதை வலியுறுத்தி பாடுகிறார்.
அந்த நம் செல்வங்களைப் பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம்!
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; ஆடும் மாடும் அற்ப உயிர்கள் அல்ல; நம் அருமைச் செல்வங்கள்!
அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்!
மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு
என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்!