எங்களை பற்றி
இக்கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காணப்படுகிறது. 2009 மே 18 ஆம் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அந்த போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், இதையடுத்து அதை தொடர்ந்த ஒரு வருடத்தில் "நாம் தமிழர் கட்சி" தமிழ்த் தேசிய கொள்கைகளை பறைசாற்றிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் கொள்கைகள்
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளவை கீழ்வருமாறு
- தமிழின மீட்சியே முதன்மை நோக்கம்.
- ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தனியரசு அமைப்பது தான். தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவது.
- மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவது, அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திடப் போராடுவது.
- தமிழை வாழவைப்பது, தமிழனை ஆள வைப்பது.
- சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வது.
- நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ அல்லது நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவது.
- இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பது. தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்பது.
- உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவது.
- சமனியத் தமிழரசை நிலைநாட்டுவது. பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது.
- உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்பது.
- சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்பது. சமத்துவமாய் வாழ வழிவகை செய்வது. சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவது.தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்பது.
- மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல! – அதை அடைவது பிறப்புரிமை! – எனவே அதற்காகப் பாடுபடுவது.
- எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்!
- அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழியாகவும் பேச்சு மொழியாகவும் இடம்பெறச் செய்தல், அனைத்து இடத்திலும் தமிழே வழிபாட்டு மொழியாகவும் வழக்காடு மொழியாகவும் இருக்கச் செய்தல்.
- தமிழ்வழியில் கற்றோருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு எனும் நிலையினை உருவாக்குதல்.
- ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்பது.
- சமயச் சார்பற்று நடத்தல்.மேலும் தனிப்பட்ட நபர்களின் சமயங்களில் தலையிடாது இருப்பது.
- அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம். கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்
- மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவது.
- அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவது. அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்பது.
- தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்பது, கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்பது!
- அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவது.
- மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவது. அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வது.
- இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்பது. (எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.
- பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்பது.
- அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நிதீமன்றம்! நிதீமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவது.
- சிலம்பம், களரி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பது.